By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை

Last updated: July 3, 2025 7:04 pm
July 3, 2025
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 3 –

நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (46). சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா (37) ஊரில் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். வடிவேல் மாதந்தோறும் மனைவிக்கு 35 ஆயிரம் ரூபாய் அனுப்பி கொடுப்பாராம். இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி தனக்கு சொந்தமான 4 பவுன் செயினை கேட்டுள்ளார். அப்போது செயின் உட்பட 35 பவுன் நகைகளை தனது தம்பிக்கு கொடுத்ததாகவும் அதை செவ்வாய் (நேற்று முன்தினம்) காலை அவர் தரலாம் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ஸ்ரீஜாவின் தம்பி விஜு விடம் வடிவேல் கேட்டபோது நகையை நான் வாங்கவில்லை ஐம்பதாயிரம் ரூபாய் கடன் தான் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து மனைவியிடம் என்னிடம் கேட்காமல் நகைகளை யாருக்கும் கொடுக்க கூடாது என கூறிவிட்டு வழக்கம்போல் வீட்டில் உள்ள அனைவரும் தூங்க சென்றனர்.

மறுநாள் காலை 7 மணி அளவில் பார்த்தபோது மனைவியை வீட்டில் காணவில்லை. வீட்டில் உள்ளே உள்ள கழிவறையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கருகி கிடந்துள்ளார். இது சம்பந்தமான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் ஸ்ரீஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீஜாவிடம் 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? என தெரியவில்லை. இரவல் வாங்கியவர் நகைகளை கொடுக்காத காரணத்தால் மனமுடைந்த ஸ்ரீஜா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே கார் மோதி கணவர் மனைவி படுகாயம்
குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம்
ஒரே நாளில் ரூபாய் 6 கோடி மீன்களுடன் கரை திரும்பிய சின்ன முட்டம் மீனவர்கள்
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அழைப்பு

May 8, 2026
20 Views
தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
இரணியல் அருகே கார் – பைக் மோதல்; தொழிலாளி சாவு; உடலை கார் அரை கிலோ மீட்டர் இழுத்து சென்றது
முதியவரிடம் நூதன முறையில் பணம் பறித்த டிப்டாப் ஆசாமி
பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account