தஞ்சாவூர் மார்ச் 22.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தகை சார் பேராசிரியர் சிறப்பு சொற் பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர் கலைமாமணி சு நரேந்திரன் தமிழ் பற்று மொழியின் தேவை குறித்தும் ,தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டி யல் மற்றும் தொல்லியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜெயக்குமார் தமிழரின் கப்பல் கட்டுமான தொழில்நுட்பம் குறித்து பேசினர்.
முன்னதாக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை தலைவர் இந்து அனைவரையும் வரவேற்றார் நிறைவாக முனைவர் பட்ட ஆய்வாளர் காருண்யா , கோவிந்தராஜ் நன்றி கூறினர். . நிகழ்ச்சியை முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பார்கவி, புனிதா தொகுத்து வழங்கினர்.



