தருமபுரி, ஆகஸ்ட் 28 –
தருமபுரி மதிகோன்பாளையம் ராமக்கால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 27-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி ஸ்ரீ சக்தி விநாயகருக்கு 12 வகையான நறுமண பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு சாமி திருவீதி உலா நடைபெற்றது.



