தருமபுரி, ஜூன் 15 –
மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளையும், பல்வேறு விழிப்புணர்வுகளையும் இந்த சமுதாயத்திற்கும், மாணவர்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, பத்தாம் வகுப்பு வேதியியல் ஆசிரியர், சதீஸ் குமாரை சந்தித்தபோது தான் இதுவரை 100 முறைக்கு மேல் இரத்ததானம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
அதுவரை இரத்ததானம் வழங்காத ஆசிரியர் மணிவண்ணன் மாணவனின் இந்த மனிதநேயமிக்க சேவையை ஆச்சரியம் கண்டு தொடர்ந்து இரத்ததானம் வழங்கி வருகிறார். இவர் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் அவர் அவரது மனைவி வரலக்ஷ்மி, மகன் ஆகாஷ், நரேந்திரன் ஆகியோர் தருமபுரி மாருதி இரத்த வங்கியில் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர். நல்ல மனிதநேய பண்பையும், சமுதாயத்தையும் உருவாக்க ஆசிரியர் மாணவர் பங்கு மிக முக்கியமான ஒன்றாவதற்கு இந்த ரத்ததானமே சான்றாகும்.



