திருச்சி, மே 9
திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்த முரளி என்பவர் தனது தாயார் பெயரில் நடத்தி வரும் சத்துமாவு நிறுவனத்திற்கு கும்பக்குடியில் இட ஒதுக்கீடு செய்து தர, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழக கிளை மேலாளர் சத்யராஜ் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து முரளி அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் சத்யராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.



