18 மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணியினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா ஈரோடு சோலார் பேருந்து நிலையம் அருகில் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இதில் கே இ பிரகாஷ் எம் பி. ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மையம் செல்வராஜ் மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு )தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



