தஞ்சாவூர் ஜூன் 19.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர் புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளிலுள்ள சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு ,கிராம வறுமை ஒழிப் பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங் களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்க்கு தமிழ்நாடு அரசா ல் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விருது பெற தகுதியுள்ள சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அள விலான கூட்டமைப்பு, வட்டார அள விலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புற சுய உதவி குழுக்கள், பகு தி அளவிலான கூட்டமைப்பு ஆகிய வை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பயிற்சி பெற்றிருத்தல் சமூகநல செயல் பாடுகளில் பங்கேற்றல் போன்ற வற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் .
மணிமேகலை விருது பெறுவத ற்கான தகுதியான கிராமப்புற சமு தாய அமைப்புகள் சம்பந்தப் பட்ட ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட அமைப்புகள் சம்பந் தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, சமுதாய அமைப்பாளர்களி டம் தொடர்பு கொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி, செய்து 28. 6.2024 க்குள் தஞ்சாவூர் மாவட்ட இயக்க மேலா ண்மை அழகு (,மகளிர் திட்டம்) இரண்டாம் தளம். அறை எண் : 223 தஞ்சாவூர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .என மாவட்டஆட்சியர் அறிக்கையில் . தெரிவித்துள்ளார்.



