கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி அடுத்த புங்கனை திருமா புரத்தைச் சார்ந்த அன்புச் செழியன் அவர்களின் புதல்வி கீர்த்திகா ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார் இதனைத் தொடர்ந்து நேபாள நாட்டில் 17/05/2025 நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பு போட்டியில்
National youth sports and education federation and Nepal youth sports federation நடத்திய ஊத்தங்கரை பேரொளி சிலம்பப் பள்ளி சார்பாக 16 மாணவர்கள் கலந்து கொண்டனர் அவரவர் வயது மற்றும் எடை பிரிவுகளைக் கொண்டு போட்டியில் கலந்து கொண்டனர் இதில் ஊத்தங்கரை அரசு பள்ளி மாணவி கீர்த்திகா இரண்டாம் இடத்தை பெற்று பயின்ற பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் மேலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



