ஈரோடு, மே 29 –
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு பெயரளவுக்கு பயிர்க்கடனை ரத்து செய்தது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முதல் அமைச்சர் விஜய் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து என்ன பேசினார் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, பாலியல் தொல்லை போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபி பொள்ளாச்சி ஆத்தூர் ஆகியவற்றை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ராஜினாமா செய்தால் 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க கூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். மது பட்டியலில் வராத கள்ளை இறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



