தென்காசி, நவ. 15 –
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டிஎன் புதுக்குடியில் பீகார் மாநிலத்தில் பாஜக தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வழிகாட்டுதலின் படி புளியங்குடி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நகர தலைவி ஆர்த்தி தலைமையில் நகர துணைத் தலைவர் நீராத்திலிங்கம் முன்னிலையில் வெடி வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் நகர துணைத் தலைவர் மாரீஸ், பாலையா, நகர நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் அணிப்பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர இளைஞர் அணி தலைவர் விஜய் குமார், நகர துணைத் தலைவர் நீராத்திலிங்கம் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் முன்னாள் நகர தலைவர் சங்கர பாண்டியன் நன்றி தெரிவித்தார்.



