நாகர்கோவில், ஜன. 16 –
ராஜாக்கமங்கலம் அருகே வடக்கு சூரங்குடி பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் வினிஷ் (16) வல்லன்குமாரன் விளையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பொங்கல் பண்டிகை ஒட்டி வெனிஸ் தனது நண்பருடன் அருகில் உள்ள கார்த்திகை வடலிகுளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வினிஷ் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர், பொதுமக்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வினிஷை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் குளத்தில் மூழ்கிய வினிஷை பிணமாக மீட்டனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


