சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை-பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை,குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், சிவகங்கை முதல் மேலூர் வரையிலான மாநில நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் 11,496 கி.மீ தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (போலூர் தொகுதி), சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் (காஞ்சிபுரம் தொகுதி), ஜெ.முகம்மது ஷாநவாஸ் அவர்கள் (நாகப்பட்டினம் தொகுதி), காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



