தஞ்சாவூர், ஜூன் 16 –
தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பின் ஞாயிறு முற்றம் 100வது சொற் பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். தமிழ் பல்கலைகழக முன்னாள் இலக்கியத்துறை தலைவர் குவே பாலசுப்பிரமணியம் ஏடக எழுத்தறிவித்தவர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்: ஏடக பதிப்பித்து சங்க இலக்கியத்தை வெளிக்கொண்டிருந்த உ.வே.சாமிநாதையரின் பணி பாராட்டுக்குரியது. அவரது தமிழ் பணியை ஆங்கில அரசும் பாராட்டியது. இதே போல் அரசன் சண்முகனார் தமிழுக்கு ஏராளமான தொண்டுகளை ஆற்றியுள்ளார். பண்டித மணி கதிரேசன் செட்டியார், நா.மு.வே. நாட்டார் போன்றோரின் தமிழ் பணிகளை நாம் எண்ணி பார்க்க வேண்டும். தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுவடி படிக்க பயிற்சி அளித்து வரும் முனைவர் மணி.மாறன் பணியைப்பிற இலக்கிய பணிகளிலும் ஒப்பிட முடியாது என்றார்.
முன்னதாக ஏடகம் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கரந்தை ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக கவிஞர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கம்பன் கழக துணைத் தலைவர் இராம சந்திர சேகரன் தொகுத்து வழங்கினார்.



