கன்னியாகுமரி, மார்ச் 9 –
கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் வில்சன் மணி (46). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை பூட்டி விட்டு தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 கிராம் எடையுள்ள தங்க நகைகள், ரூ.10,000 ரொக்க பணம், வீட்டில் நிறுத்தி இருந்த பைக் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.
இது குறித்து வில்சன் மணி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து தெரிந்து கொண்டு கும்பல் கைவரிசை காட்டி உள்ளது தெரிய வந்தள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் கைரேகைகள் சிக்கி உள்ளன. இதன் அடிப்படையில் தணிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


