தருமபுரி, மே 18 –
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம் மருந்தகம், சிகிச்சை பிரிவுகள் மற்றும் கணினியில் நோயாளிகள் விவரங்களை பதிவு செய்வது ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் நாகவேந்தன், குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் ரமேஷ் பாபு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.



