தென்காசி, ஏப்ரல் 20 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மே 5 திருவாரூரில் நடைபெறும் வணிகர் தின 43வது மாநில மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் கட்சியினரின் பிரச்சாரங்கள் தீவிர மடைந்துள்ள நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் குற்றாலத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட வணிகர் சங்க வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த அவர் அங்கு வந்திருந்த வியாபாரிகளிடம் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் ஆதரவு எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளது அதேபோல் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த உடன் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதனால் வியாபாரிகள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார். திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவனுடன் வாக்கு சேகரிக்க முன்னாள் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் மற்றும் திமுக மாநில இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
குற்றாலத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட வணிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ், மாநிலத் துணைத் தலைவர் கோல்டன் செல்வராஜ், மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, மாநில இணை செயலாளர் நாராயண சிங், தென்காசி தெற்கு மாவட்ட மூத்த தலைவர் பரமசிவன், மாவட்ட செயலாளர் சந்திரமதி ராஜா, மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், நகரப் பொருளாளர் ரசூலிதின், வடக்கு மாவட்ட பொருளாளர் கலைவாணன், இளைஞர் அணி அமைப்பாளர் காளிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராஜா, துரைமுருகன் மற்றும் தென்காசி மாவட்ட வணிகர் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



