நாகர்கோவில், மே 11 –
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மாதா காலனி பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி ஒபிலியா (38). இவருக்கு ஏற்கனவே பிரதாப் என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு, கணவரை பிரிந்து நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்று ஒபிலியா தனது தாயாருடன் வசித்து வந்தார்.
பின்னர் கடந்த 25.9.2025 அன்று புஷ்பராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 2வது திருமணம் ஆகி சுமார் 6 மாதங்கள் ஆகியும் குழந்தை பேறு இல்லாத நிலையில் மனமுடைந்த நிலையில் ஒபிலியா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்தனர். ஒபிலியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் தனக்கு குழந்தை பேறு இல்லாததை எண்ணி வருத்தமடைந்த அவர் வீட்டில் குளியல் அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டில் உள்ளவர்கள் திரும்பி வந்து ஒபிலியாவை தேடிய போது அவரை காணவில்லை. பின்னர் வீட்டின் குளியல் அறையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு ராஜக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


