தஞ்சாவூர், ஜூலை 13 –
மேகதாது கர்நாடக அணை கட்டும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுக்க கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே சி பி எம் எல் மக்கள் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டினால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறிவிடும்.
மேலும் தமிழ்நாட்டில் 32 மாவட்ட குடிநீர் தேவையை நிறைவு செய்வது பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். எனவே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிக ளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினையை தமிழ்நாடு அரசு கவனமாக கையாண்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தவெகவின் தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் விவசா யிகள் அனைத்து விதமான கடன் களையும் எவ்வித நிபந்தனை இன்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கங்கள் எழுப்பப்பட்டன
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜன நாயக விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாநில அமைப்பாளர் ராமர் தலைமை வகித்தார். சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயலர் உமாபதி, துணை செயலர் செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்ட செயலர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் ஜெய.சிதம்பரநாதன் தொடக்க உரையாற்றினார். மாநில பொது செயலாளர் கசி. விடுதலை குமரன் நிறைவுரையாற்றினார்.
உலக தமிழர் பேரவையின் துணைத் தலைவர் அய்யனாபுரம் முருகேசன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், இடது சார்பில் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தங்க குமரவேல், பொறியாளர் துரை அசோகன், எழுத்தாளர் சாம்பான், சமூக ஆர்வலர் சாமி. கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



