மார்த்தாண்டம், நவ. 3 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர்
முன்னிலையில் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் காங்கிரஸ் துண்டு அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், பாகோடு முன்னாள் பேரூராட்சி தலைவர் மோகன்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



