மார்த்தாண்டம், ஏப். 6 –
குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48). இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஜஸ்டின் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லதாவுக்கும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி அஜி (52) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் கள்ளக்காதலாக மாறி லதா கணவனை விட்டு பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். அவருடன் அஜியும் சேர்ந்து குடியேறினார். இந்த சம்பவம் அஜியின் உறவினர்களுக்கு தெரிய வந்து பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அஜி காரோட்டில் ஓட்டிலுள்ள லதா வீட்டில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை லதா, அஜி ஆகியோர் வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு வந்த லதாவின் கணவர் ஜஸ்டின் உள்ளிட்ட 4 பேர் கும்பல் வந்து வீட்டை அடித்து உடைத்து லதாவையும் அஜியையும் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.
இதில் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அஜியை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லதாவை அருமனை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து லதாவின் கணவர் ஜஸ்டினை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


