நாகர்கோவில், மார்ச் 19 –
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்தவமனையில் சிறப்பாக நடைபெற்ற 2026 இப்தார் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சுங்காங்கடை பகுதியில் அமைந்துள்ள கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனையில் வைத்து இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. கிம்ஸ் ஹெல்த் குழும தலைவர் டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா சிறப்பு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பெருவிளை ஜும்மா மசூதி இமாம் முகம்மது ஹசன் ஆலிம், மலங்கரை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பௌலோஸ், பிரம்மகுமாரிகள் ராஜயோகினி பி.கே. கோகிலா சகோதரி, நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெக்ஷ்மி, இந்திய ஓய்வுபெற்ற அஞ்சல் சேவை (IPoS) அதிகாரியும் திருவனந்தபுரம் டெக்னோ பார்க் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான மெர்வின் அலெக்சாண்டர், டாக்டர் தனேஷ் ராஜமாணிக்கம் மற்றும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், கிம்ஸ் ஹெல்த் திருவனந்தபுரம் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் பணியாளர்கள் உட்பட 650-க்கும் மேற்பட்ட அழைப்பிதழ் பெற்ற விருந்தினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.



