திருப்பூர், அக். 29 –
தாராபுரம் சாலை திருப்பூரை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நாட்டின் உயர் பதவியான துணை ஜனாதிபதி பதவி மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதனை வரவேற்கும் விதத்தில் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதி முதலீட்டாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைைவர்கள், சமுதாய அமைப்பு தலைவர்கள் அனைத்து சங்கத்தினரும் இணைந்து நடத்திய பாராட்டு விழா தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் மேதகு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் முன்னாள் சேர்மன் ஆர். கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போற்றி சிறப்பித்தார். இந்த நிகழ்வில்
பி சி சி பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் கோபால்சாமி, மாநகர துணை தலைவர் கதிரேசன் மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



