தமிழ்நாட்டில் விற்பனையாவதோடு பிற மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத் துறையின் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறிகளும் கிடைக்கும் வகையில் பயிர் சாகுபடி திட்டமிடல் அறிக்கையை தயாரித்து அதன்படி பயிரிட்டு வணிகம் செய்யவும் நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இணைந்து நேரடியாகவே சென்னை பெங்களூர் போன்ற இடங்களுக்கு வணிகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சபீலா மேரி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, நபார்டு வங்கி மேலாளர் திருமலை ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த கல்கி, நீலகிரி மாவட்ட கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்கம் கோத்தகிரி, மலநாடு குரு சித்தகிரி, ஸ்ரீ கெத்தையம்மன் சோலாடா, நீலமலை கூடலூர் ஆதிவாசி உழவர் உற்பத்தியாளர்கள், ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குனர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறி
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics