திருவெண்ணெய்நல்லூர், ஆக. 27 –
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் கருத்தடை தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தலின்படி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் சஞ்சீவிராஜ் அறிவுரையின்படி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் அழைப்பின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் கால்நடை மருத்துவர் முருகவேணி தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கதிரவன், கோவிந்தசாமி, சூர்யா, ஜெயஸ்ரீ மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் குணசேகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 4 பெண் நாய்கள் மற்றும் 19 ஆண் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு வெறி நாய்கடி தடுப்பூசியும் போடப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் பாலமுருகன், இழுவை ஓட்டுநர் தனஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.



