மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் “அன்புக் கரங்கள்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோர் இருவரால் கைவிடப்பட்ட குழுந்தைகள், இயலாநிலையில் உள்ள ஒற்றைப்பெற்றோர், தீராத வியாதியில் உள்ள ஒற்றை பெற்றோர், சிறைச்சாலையில் உள்ள ஒற்றைப் பெற்றோர் போன்ற பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000/- வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 9700 வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து முதற்கட்டமாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள 207 பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், “அன்புக் கரங்கள்” திட்டம் மூலமாக மாதந்தோறும் ரூ.2000/- உதவித்தொகை பெறுவதற்கான 207 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000/ பெற்று பயனடைந்த மாணவி ஆர். சுனேலா அவர்கள் தெரிவிக்கையில்
என் பெயர் ஆர். சுனேலா நான் முகையூர் செயின் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை இரத்தினவேல் மற்றும் அம்மா பாத்திமா மேரி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார்கள். தாய், தந்தை இறந்து மிகவும் கஷ்டபட்டு வந்த நிலையில் நான் எனது பாட்டி வீட்டில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று படித்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த நான் மிகவும் கஷ்டபட்டு வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அன்புக் கரங்கள் திட்டதின் மூலம் மாதம் ரூ.2000/ தற்போது பெற்று வருகிறேன். எனது பாட்டி வீட்டில் தங்கி படிக்கும் எனக்கு அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரூ.2000/ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஏதேனும் செலவு ஏற்படும் போது வயதான பாட்டியிடம் கேட்க தயக்கமாக இருக்கும். ஆனால் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அன்புக் கரங்கள் திட்டதின் மூலம் மாதம் ரூ.2000/ தருவதால்
எனது சிறு சிறு செலவுகளை நானே பார்த்து கொள்வதோடு, செலவு போக மீதி இருக்கும் பணத்தை சேமித்து வைத்துக் கொள்கிறேன். தாய், தந்தையை இழந்த நிலையில் என் கல்வி பாதித்து விடுமோ என்ற பயம் இருந்த நிலையில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி எந்த விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்ற உயரந்த நோக்கத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலமாக மாதம் ரூ.2000/ வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000/ பெற்று பயனடைந்த மாணவர் த. யுவராஜ் அவர்கள் தெரிவிக்கையில்: என் பெயர் த.யுவராஜ் செங்கமேடு கிராமத்தை சேர்ந்த நான் கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தனபால் நான்காண்டுக்கு முன் உயிரிழந்தார். எனது தாயார் பராமமரிப்பில் இருந்து வந்த நான் தற்போது அம்மா திருமதி செல்வராணியும் ஓராண்டுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நான் தற்போது தனியாக வீட்டில் தங்கி படித்து வருகிறேன்.
ஏழ்மை குடும்பத்தை சார்ந்த நான் தனியாக இருந்து மிகவும் சிரமம்பட்டு பள்ளிக்கு சென்று படித்து வருகிறேன். அவ்வபோது எனக்கு ஏற்படும் சிறு சிறு செலவுகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அன்புக் கரங்கள் திட்டதின் மூலம் மாதம் ரூ.2000/ கொடுத்து வருகிறார். இதனால் எனக்கு தேவைப்படும் சிறு, சிறு செலவுகளுக்கு யாரையும் எதிர்பார்க்காமல் செலவு செய்து கொள்கிறேன். இதனால் என்னால் பள்ளியிலும் சக மாணவர்களிடமும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. என் கல்வி நலனுக்காக தந்தையாக இருந்து மாதம் ரூ.2000/ வழங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.



