விழுப்புரம், அக். 6 –
விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா நடைபெற்றது. விழுப்புரம் அருகே கெடார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஞானபிரகாஷ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். விழாவில் சரவணப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களிடம் போதைப் பொருள், பெண் கல்வி மற்றும் நாட்டு நலப் பணி திட்டம் குறித்து சிறப்பு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக திட்ட அலுவலர் காளிமுத்து நன்றி கூறினார்.



