திருவெண்ணெய்நல்லூர், ஆக. 22 –
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி பிறந்தநாளையொட்டி நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதம சிகாமணி பிறந்த நாளையொட்டி நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், துணைத் தலைவர் ஜோதி, பொருளாளர் சையத் நாசர், மாவட்ட பிரதிநிதி சுரேஷ்பாபு, துணை செயலாளர்கள் காந்திமதி வெங்கடேசன், தில்லை. காமராஜ், இளைஞரணி சுரேஷ், பேச்சாளர் பரசுராமன், கவுன்சிலர் செல்வம், வார்டு செயலாளர்கள் யாசர் அராபத், வெற்றிவேல் செழியன், குமஸ்தா ரமேஷ், செல்வம், தல. சித்தா, கோவிந்தன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



