தருமபுரி, மே 25 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சிறப்பு பேரூராட்சி அருந்ததியர் காலணியில் கீழ்கண்ட முகவரியில் வசித்து வரும் பெருமாள் (56) குடிநீர் இணைப்பு வழங்க ரூ.14,000 வைப்புத் தொகையை ஸ்டேட் பேங்க் மூலமாக 14/03/2022 அன்று செலுத்தி உள்ளார். ஆனால் இதுவரை பாலக்கோடு பேரூராட்சி குடிநீர் இணைப்பு வழங்காமல் அழைக்கழிப்பு செய்துள்ளனர். இதுபோல் 300க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளார்கள். பேரூராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்திவிட்டார்கள் மீண்டும் வழங்க வேண்டும். பேரூராட்சியில் இதற்கான மனுக்களை அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த மனுவை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாலக்கோடு சமூக ஆர்வலர்கள் சிவா, செல்வம், அழகு பெருமாள், குணசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



