கன்னியாகுமரி, ஏப்ரல் 30 –
தாமரைகுளம் அருகே உள்ள ஆண்டிவிளையில் சித்திரை மாத தேர் திருவிழாவை முன்னிட்டு சிவசக்தி கைப்பந்து கழகத்தார் நடத்தும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று ஊர் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் இருந்து 9 அணிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியினை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.
போட்டிகளில் வென்றவர்களுக்கு ஆண்களுக்கான முதல் பரிசு ரூ.20,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000, நான்காவது பரிசு ரூ.7,000, பெண்களுக்கான முதல் பரிசு ரூ.7,000, இரண்டாவது பரிசு ரூ.5,000, மூன்றாவது பரிசு ரூ.4,000, நான்காவது பரிசு ரூ.3,000 இதில் கைப்பந்து கழக நிர்வாகிகள் தலைவர் ஆதி விஸ்வநாதன், செயலாளர் கிருஷ்ண மணி, பயிற்சியாளர்கள் விஜயகுமார், சபாபதி, ஒருங்கிணைப்பாளர் செல்வன் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தாமரை பிரதாப், ஜான்சன், ஜானி, முன்னாள் பேரூராட்சி தலைவர் தேரூர் முத்து, சிறந்த கைத்தொட்டி கழக வீரர் அமுதன், சகாதேவன் மற்றும் கைப்பந்து கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



