திருவெண்ணெய்நல்லூர், செப். 12 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில் விசாலாட்சி பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாணிக்க விநாயகர், ஸ்ரீபாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் திமுக கிளை கழக செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான பீரங்கி குணா ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., துணைவியார் விசாலாட்சி பொன்முடி கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் விசாலாட்சி பொன்முடிக்கு கலசம் வழங்கி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் பாக்யராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



