சென்னை, மார்ச் 23 –
சென்னையில் எம்.வி. டயாபடீஸ் மற்றும் பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் இணைந்து 40 வது “பேராசிரியர் எம். விஸ்வநாதன் தங்கப்பதக்கம் விருது ” வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏ.வி.ஏ குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஏ.வி. அனுப் இந்த வருடத்திற்கான எம்.வி.வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆயுர்வேதம் மூலிகை மற்றும் உணவுப் பொருட்கள் துறையில் செயல்படும் இவர் ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை இணைத்து பணியாற்றியுள்ளார். நீரிழிவு மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் எமரிடஸ் பேராசிரியரான டாக்டர் அசோக்குமார்தாஸ் இந்த 40ம் ஆண்டிற்கான தங்கப்பதக்கம் உரையை வழங்கி, அரசு மற்றும் நீரிழிவு தொடர்பான தனது கருத்துக்களையும் சிறப்பான முறையில் பகிர்ந்தார்.
இந்நிகழ்வில் சென்னையில் உள்ள சி.எஃப்.டி.ஐ இயக்குனர் கே. முரளி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். எம்.வி. டயாபடீஸ் தலைமை மருத்துவரான விஜய் விஸ்வநாதன் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட “டயாபடீக் காலணிகள்” புத்தகத்தைப் பற்றி விவரித்து பேசினார்.
இந்நிகழ்வில் டாக்டர் விஜய் விஸ்வநாதன் இந்த உரை மற்றும் புத்தக வெளியீடு நிகழ்வானது இந்தியாவில் நீரிழிவு சிகிச்சை குறித்து விழிப்புணர்வு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என தெரிவித்தார். அரசு மருத்துவ நிர்வாக கட்டமைப்புகளும் மற்றும் பொது பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் இந்தியாவில் நீரிழிவு பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்று மேலும் அவர் கூறினார்.



