மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கீழ் சிறப்பு தூர்வாரம் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரி வடிநில கோட்டம் பொறையார் உபகோட்டத்தில் செம்பனார்கோயில் மங்கநல்லூர் மற்றும் பொறையார் ஆகிய சரகங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 284 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவிரி ஆற்றின் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இவற்றில் 194 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணிகளை விரைவாக செய்து முடிப்பது குறித்து அத்திக்கடவு அவினாசி திட்ட சிறப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருமலை குமார், சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பொறையார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்ணப்ப மூலை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன், உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர் வீரப்பன் சீனிவாஸ் உடன் இருந்தனர். பணிகளை விரைவாக முடிக்க அப்போது அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு



