மயிலாடுதுறை, பிப்.27-
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அமமுக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை செயலாளர் ராஜு, மாநில மாணவரணி துணை செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் அம்பேத்கர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் செங்கொடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு காமேஷ், மாவட்ட மகளிரணி ராதிகா உட்பட பலர் பேசினர். இதில் நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் சிவா வரவேற்றார். நகர செயலாளர் ரதா நன்றி கூறினார்.