சேலம், ஜூன் 29 –
சேலம் கோட்டை மைதானத்தில் 29.6.2026 இன்று கடந்த காலத்தில் சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களிடம் இன்றைய முதல்வர் விஜய் நான் ஆட்சிக்கு வந்தால் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனே கைவிட வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக சாதியால், வறுமையால், அறியாமையால், சமூகத்தால் தூய்மை பணிக்கு தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப், இஎஸ்ஐ பணத்தை முறையாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், மலம் கலந்த குப்பை கழிவுகளை கையாள் அள்ளுவதால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி இறப்பு ஏற்படுவதை தவிர்க்க வாரம் ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி அவர்களின் நோய் தீர மருத்துவசதியும், அவர்களுக்கு தரமான உணவு மற்றும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் செந்தாரைகை தொழிற்சங்க சேலம் மாவட்ட செயலாளர் பூபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடைபெற்றது.


