பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாரந்தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடிபெற்று வருகிறது. தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வைத்தார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது, தமிழக முழுவதும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாநகராட்சி பகுதிகளில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் வாரந்தோறும் புதன்கிழமை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்தில் அதிக அளவு மனுக்கள் வந்தாலும் தற்போது குறைந்த அளவுகள் மனுக்கள் வருகின்றனர். மேலும், குடிதண்ணீர், சாக்கடை வசதி, இறப்பு, பிறப்பு சான்றிதழ் உள்பட அடிப்படை வசதிகளுக்கான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
சாலை வசதிகள் குறித்த மனுக்கள் மட்டும் நிலுவையில் உள்ளது. சாலைகள் போடுவதில் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரோடுகளும் போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியில் தினசரி 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், பிளாஸ்டிக் பைகள் தான் அதிகளவு வருகிறது. பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னும் பொதுமக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தி வருகிறார்கள். தற்போது பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதை தடுக்கும் விதமாக 427 இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது 120 இடங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இதுவும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியை பசுமை நகரமாகும் திட்டத்தில் இதுவரை 5 லட்சம் மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் தங்களது வீடுகளுக்கு முன்பு மரங்கள் வளர்க்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
முகாமில், துணை ஆணையர் சரவணகுமார், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், திட்ட பொறியாளர் ரங்கநாதன், வடக்கு மண்டல ஆணையர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் நாகராஜன், முனி, ரஹ்மத், மண்டல தலைவர் நிர்மல் ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சுதா, காந்தி, மணி, ஜெயசித்ரா, அந்தோணி, பிரகாஷ், மாஸ்லின், பவானி, சுப்புலட்சுமி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜேஸ்பர், பிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மண்டல தலைவர் ஜவகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



