திருப்பூர், செப். 27 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்வினையாட்டு அரங்கத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்டதில் உள்ள 32 கல்லூரியில் மாணவர்கள் காணொளி காட்சி வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டார்கள். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மேயர் ந. தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ர. பாலசுப்பிரமணியம், இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்), மண்டலத்தலைவர்கள் தம்பிகோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), திருப்பூர் வருவாய் கோட்டாட்சி சிவபிரகாஷ், எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இ.ரெ. தமிழ் மலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



