திருப்பூர், செப். 05 –
மானிட சமுதாயம் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என பாடுபட்ட வைக்கம் வீரர் பெரியார் அவர்களின் திருவுருவப்படத்தை சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்து உணர்ச்சிமிகு உரை நிகழ்த்தினார்.
கழகத் தலைவர் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க உரையினை கழகத்தினரும் பொதுமக்களும் கண்டு களித்திடும் விதமாக திருப்பூர் தாராபுரம் ரோடு கலைஞர் அறிவாலயம் எல்.இ.டி திரை அமைத்து கழக நிர்வாகிகளுடன் தெற்கு மாவட்ட கழக செயலாளர் நான்காம் மண்டல தலைவர் இ.ல. பத்மநாபன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



