நாகர்கோவில், பிப். 6 –
நாகர்கோவில், பெருவிளை பகுதியை சேர்ந்தவர் பிபின்லால் (36). இவரது மனைவி அஸ்வினி. குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அஸ்வினி தற்போது அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவியை பலமுறை நேரில் சென்று குடும்ப நடத்த அழைத்தும் அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவில் பிபின்லால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அந்த கும்பல் மனைவி அஸ்வினி, மாமனார், மைத்துனர் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிபின்லால் மற்றும் அவருடன் வந்த கும்பலை தேடி வருகிறார்கள்.


