கன்னியாகுமரி, நவ. 8 –
கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி என்பவர் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த விஷ்ணு (25) என்பவர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தியுள்ளார். போக்குவரத்து போலீசார் அங்கு வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். இ
தில் ஆத்திரமடைந்த விஷ்ணு சப் இன்ஸ்பெக்டர் உட்பட வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தைகள் பேசி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


