திருப்பூர், ஜூலை 11 –
காலேஜ் ரோடு எம்.ஜி.ஆர் நகரில் நேற்றைய தினம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 27 வீடுகள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்ததும் திமுக திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வுமான க. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதி அளித்தார். தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் பாதிக்கப்பட்ட 27 குடும்பத்தினருக்கும், தங்களது சொந்த நிதியில் இருந்து எம்எல்ஏ தலா 10 ஆயிரம் ரூபாய், மேயர் 5 ரூபாய் வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம்
கிடைக்கப்பெறும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர். தெற்கு மாநகர நிர்வாகிகள், வடக்கு மாநகர திமுக நிர்வாகிகள், நில அளவை ஆய்வாளர் தேவி, கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகசாமி உடன் இருந்தனர்.



