குலசேகரம், டிச- 15
குமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது போன்று வெளியூர் பயணிகளும் இங்கு தங்குவதற்காக வசதியாக அருவியை சுற்றி ஏராளமான வீடுகள், விடுதிகள் உள்ளது. இவைகளில் பயணிகள் குடும்பமாக தங்கி விடுமுறை கழிப்பது வழக்கம்.
இதனை பயன்படுத்தி காதல் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் போன்றோர் அறை எடுத்து தங்குவதும் வழக்கமாக நடந்து வருகிறது. சாதாரண காதல் ஜோடிகள் அங்கம் இங்கு சுற்றி பார்த்து, சில்மிஷத்தில் ஈடுபடுவதும், ஒரு கட்டத்தில் லாட்ஜுகளில் தங்குவதும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது சிலர் உறவினர்கள், நண்பர்களிடம் மாட்டிக் கொள்வதும் உண்டு.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் காதலர்கள் வகுப்புக்கு மட்டம் போட்டு லாட்ஜ்களில் காதலுடன் தங்குவது தொடர்கதையாக நடக்கிறது. குறிப்பாக கேரள மாநிலம் மற்றும் எல்லை பகுதியிலிருந்து அதிகம் காதல் ஜோடிகள், கள்ள காதல் ஜோடிகளுக்கு புகலிடமாக குமரி மாவட்ட விடுதிகள் உள்ளது.
இதை போன்று சில வாரங்களுக்கு முன்பு கேரளாவிலிருந்து வாலிபர் ஒருவர் மாணவ வி ஒருவரை அழைத்து வந்து திற்பரப்பு பகுதியில் தங்கி உள்ளார். அந்த மாணவியுடன் பலமுறை லாட்ஜில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மாணவி கர்ப்பமாகி உள்ளார். விஷயம் வெளியில் தெரிந்ததால் மாணவியின் பெற்றோர் கேரளாவில் உள்ள குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். விசாரணயில் மாணவி தான் தாங்கிய லாட்ஜுகள் குறித்து தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து இன்று 15 ஆம் தேதி காலை கேரளா போலீசார் திற்பரப்பு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் மாணவி தங்கியது குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் மாணவியின் கர்ப்பத்து காரணமான காதலனையும் பிடித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.