தமிழ்நாடு முழுவதும் மத்திய மாநில அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு மாநில வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட வணிகர் சங்க தலைவர் வைகுண்ட ராஜா , மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ் தலைமையில் தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மத்திய மாநில அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய ,மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன முக்கிய கோரிக்கைகளாக சொத்து வரி 6% உயர்த்தியதை திரும்ப பெற சொல்லியும் ,வணிக உரிமை கட்டணம் மற்றும் தொழில் வரிகள் போன்றவற்றின் உயர்வை திரும்பப் பெற வேண்டும், தமிழக வணிகர்கள் மீது ஒன்றிய அரசு திணிக்கும் நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெறவும் ,மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி நிர்வாகமே குப்பை வரியை ஒரே சீராக்க வேண்டும் என்றும், திருமண மண்டபங்களில் தனியார் வணிகத்தை அனுமதிக்க கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் கோல்டன் செல்வராஜ் ,தென்காசி வியாபாரி சங்கத் தலைவர் பரமசிவன் ,செயலாளர் சந்திரமதி ராஜா, பொருளாளர் ரசூல்தீன் ,துணைத் தலைவர் ஜெபராஜ் ,துணைச் செயலாளர் இளங்கோ ,இணை செயலாளர் பரமசிவன், செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ் ,சுப்புராஜ் ,அழகுராஜா ,சாகுல் ஹமீது ,பால்ராஜ், மாரியப்பன், முத்துக்குமாரசாமி ,சூரியநாதன் ,செந்தில், செந்தில்குமார், வெங்கடேஷ் ,முகமது இப்ராஹிம், வெள்ளத்துரை, கோவிந்தன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.



