தருமபுரி, ஏப்ரல் 27 –
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே. ஈச்சம்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு அன்று தேர்தல் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தும், வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை தடுத்தும் சாலை மறியல் நடந்தது.
இந்த மறியல் போராட்டம் தொடர்பாக கே. ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்த மூர்த்தி, தினேஷ்குமார், பார்த்திபன், நந்தகுமார், ராணி, ஆர்த்தி, சுகுணா, லாவண்யா, புவனேஸ்வரி, சுதா, லதா உள்பட 28 பேர் மீது கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


