உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பு சார்பாக தலைவி 2025 மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மீனாட்சி தேவி, கே.எஸ். ஆர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முத்துச்சாமி, IPS ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் மீனாட்சி தேவி கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினார்கள். முத்துச்சாமி IPS கலந்து கொண்டு பெண்கள் சங்ககாலத்திலிருந்து தற்போது வரை பெண்களின் செயல்பாடுகள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது பற்றி விரிவாக பேசினார்.நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக விஜயா வெங்கடேஸ் கலந்து கொண்டு போக்சோ சட்டத்தைப் பற்றி மிகச்சிறப்பாக பங்கு கொண்ட பெண்கள் மத்தியில் பேசினார்.இந்நிகழ்வில் நாகா ஃபுட்ஸ் CEO லட்சுமி விஜயானந்த், தான் கடந்து வந்த பாதை மற்றும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் மற்றும் அந்த தடைகளை உடைத்து எவ்வாறு முன்னேறுவது என்பது பற்றி விரிவாக பேசினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பின் பொருளாளர் சார்மிளா வரவேற்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக அறந்தாங்கி நிஷா மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் சஞ்சய் ஆகியோர் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பு தலைவர் பிரபு
சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட செக்சன் 8 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக தலைவி லீட் பவுண்டேசன் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தலைவி லீட் பவுண்டேசன் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி பொருளாளர் சர்மிளா மற்றும் கவிதா செந்தில்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் மற்றும் வளரும் பெண் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட மனிதவள கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் இறுதியாக ராதாகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.



