கிருஷ்ணகிரி,ஏப்.16- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில்கட்சியின் அம்மா நீர்மோர் பந்தல் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சுமதி ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி வி ராஜேந்திரன் தலைமையில் துவக்கி வைத்தனர்.பர்கூரில் கடந்த 17 நாட்களுக்கு முன்பு நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து இன்று 17 வது நாளாக மாவட்ட துணை செயலாளர் சுமதி ராஜேந்திரன் நகர செயலாளர் கணேசன் ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராசன் ஆகியோர் கலந்து கொண்டு பர்கூர் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் கூழ் ஆகியவை வழங்கினர்.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீர்மோர் மற்றும் கூழ் ஆகியவற்றை வாங்கி கோடை வெயில் தணிக்கும் வகையில் வாங்கி அருந்தினர்.



