கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.68 இலட்சத்து 08 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஒசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, முட்டை, மாணவர்களின் கற்றல் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, குழந்தைகளின் வருகை பதிவேடு நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தை சுகாதாரமாக பராமரிக்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.31 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களையும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, கட்டிடம் பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 4 வகுப்பறைகளில் பழுது பார்க்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொர்ந்து, சென்னசந்திரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் பைரசந்திரம் முதல் மாரசந்திரம் மேல்நிலைநீர்தேக்க தொட்டி வரை சுமார் 1 கிலோ மீட்டர் துரத்திற்கு பைப்லைன் அமைக்கும் பணிகளையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும், சென்னசந்திரம் மற்றும் காலஸ்திபுரம் கிராமங்களில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிறிய அளவிலான பொது சுகாதார வளாகம் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.