தென்தாமரைகுளம்., அக். 29.
கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைபதியின் முன்பு உள்ள கலையரங்கில் தமிழ்நாடு அரசு
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில்
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு
அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் இணைந்து நடத்திய
இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது இந்த மருத்துவ முகாமை சாமிதோப்பு தலைமைபதி நிர்வாகிகள் குரு.பால.ஜனாதிபதி,குரு.பையன் நேம்ரிஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் மருத்துவர்கள்
ரணீஷ்,இந்திரா, ஜாஸ்மின், ஜெஸ்லின், சாமுண்டீஸ்வரி, உதவியாளர் தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் அய்யாவழி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.