மயிலாடுதுறையில்
அசோசியேஷன் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் ( இந்தியா) 50வது புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தேசிய தலைவர் பொறியாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் ராவ், பொருளாளர் சீனிவாசன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் புதிய பொறுப்பாளர்கள் தலைவராக பொறியாளர் வெங்கடேஷ், செயலாளராக பொறியாளர் வேல்முருகன், பொருளாளராக பொறியாளர் செந்தில்குமார், மைய உயர்மட்ட குழு நிர்வாகிகள் பொறியாளர் பாலாஜி, பொறியாளர் சுந்தரமூர்த்தி , பொறியாளர் அபிராம சுந்தரம் , பொறியாளர் ரவிச்சந்திரன் ,பொறியாளர் வெங்கடேஸ்வரன் , திருஞானசம்பந்தம் ஆகியோர் பொறுப்பேற்றுகொண்டன சங்க செயலாளர் பொறியாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.



