வங்கதேச ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மயிலாடுதுறையில் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் நாராயணன்ஜீ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இருந்து புறப்பட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை முன்கூட்டியே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்ததால் போலீசார் மற்றும் போர்ட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் கோவி.சேதுராமன், மோடி.கண்ணன், வெங்கடேசன், வழக்கறிஞர் கோமல் வினோத், நாஞ்சில்.பாலு, சித்ராமுத்துக்குமார், ராஜ்மோகன், ஸ்ரீதர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.



