ஈரோடு மார்ச் 28
ஈரோடு மாநகராட்சியில் 2025- 2026 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். துணை மேயர் செல்வராஜ் நிதிக் குழு தலைவரும் கவுன்சிலருமான மல்லிகா நடராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மொத்த வருவாய் ரூ 517 கோடியே 18 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதில் ரூ. 5 கோடியே 49 ஆயிரம் உபரி நிதி ஆகும் .
இதை தொடர்ந்து நடந்த சாதாரண கூட்டத்தில் 77 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன இதில் ஈரோடு அரசு ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலையும் ஈ வி கே சம்பத் சிலையும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் ஏலம் விடப்பட்டுள்ளது மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் ஏலம் விடப்பட்டுள்ளது இந்த ஏலத்தை ரத்து செய்து விட்டு மாநகராட்சி திருமண மண்டபத்தை மாநகராட்சி நிர்வாகமே மீண்டும் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர் .இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.



